» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயிலில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தல் : வாலிபர் கைது

வியாழன் 10, ஏப்ரல் 2025 4:33:11 PM (IST)



தூத்துக்குடியில் ரயிலில் வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு மைசூரில் இருந்து வந்த விரைவு ரயிலில் இருப்புப்பாதை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் பையை சோதனை செய்ததில் அவர் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. 

விசாரணையில் அவர் சேர்வைக்காரனமடம், மேலத் தெருவைச் சேர்ந்த வெள்ளையா மகன் முத்துக்குமார் (28) என்பதும் பெங்களூரில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 24 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory