» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி: சிறுவன் காயம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 7:35:31 PM (IST)
தூத்துக்குடியில் மொட்டை மாடியில் செட் அமைப்பதற்காக இரும்பு கம்பியை கொண்டு சென்றபோது மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார். 13 வயது சிறுவன் காயம் அடைந்தார்.
தூத்துக்குடி பத்திரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாட்ஷா. சர்பத் வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டு மொட்டை மாடியில் செட் அமைப்பதற்காக இன்று மாலை தூத்துக்குடி தாளமுத்து நகர் அ.சண்முக புரத்தைச் சேர்ந்த சின்னத்துரை மகன் சௌந்தர்ராஜன் (32) மற்றும் ஒரு நபர் சேர்ந்து கம்பியை மொட்டை மாடிக்கு ஏற்றியுள்ளனர்.
அப்போது மொட்டை மாடியில் இருந்தவாறு சௌந்தர்ராஜன் கம்பியை வாங்கியுள்ளார். இதில் இரும்பு கம்பி அருகே சென்ற மின்சார வயர் மீது உரசியதில் கம்பியில் மின்சாரம் பாய்ந்து சௌந்தர்ராஜன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்ட சவுந்தர்ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்போது அருகே இருந்த ரஹ்மத்துல்லாபுரம் முகமது அலி மகன் ஆசட் வயது (13) என்ற சிறுவன் காயம் அடைந்தார். இதை தொடர்ந்து அவரை தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பாகம் காவல் ஆய்வாளர் பாஸ்கர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










