» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி: சிறுவன் காயம்

வியாழன் 10, ஏப்ரல் 2025 7:35:31 PM (IST)

தூத்துக்குடியில் மொட்டை மாடியில் செட் அமைப்பதற்காக இரும்பு கம்பியை கொண்டு சென்றபோது மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார். 13 வயது சிறுவன் காயம் அடைந்தார். 

தூத்துக்குடி பத்திரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாட்ஷா. சர்பத் வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டு மொட்டை மாடியில் செட் அமைப்பதற்காக இன்று மாலை தூத்துக்குடி தாளமுத்து நகர் அ.சண்முக புரத்தைச் சேர்ந்த சின்னத்துரை மகன் சௌந்தர்ராஜன் (32) மற்றும் ஒரு நபர் சேர்ந்து கம்பியை மொட்டை மாடிக்கு ஏற்றியுள்ளனர். 

அப்போது மொட்டை மாடியில் இருந்தவாறு சௌந்தர்ராஜன் கம்பியை வாங்கியுள்ளார். இதில் இரும்பு கம்பி அருகே சென்ற மின்சார வயர் மீது உரசியதில் கம்பியில் மின்சாரம் பாய்ந்து சௌந்தர்ராஜன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்ட சவுந்தர்ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்போது அருகே இருந்த  ரஹ்மத்துல்லாபுரம் முகமது அலி மகன் ஆசட் வயது (13) என்ற சிறுவன் காயம் அடைந்தார். இதை தொடர்ந்து அவரை தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பாகம் காவல் ஆய்வாளர் பாஸ்கர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory