» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்.11 உள்ளூர் விடுமுறை அறிவிக்க பக்தர்கள் கோரிக்கை!
புதன் 2, ஏப்ரல் 2025 5:46:08 PM (IST)
பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்.11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்களால் பங்குனி உத்திரத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தென் மாவட்டங்களில் இந்துக்கள் அனைவரும் தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
இதற்காக ஆண்டுதோறும் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்களும் குலதெய்வ கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்வதற்கு வசதியாக வரும் ஏப்ரல் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
தமிழன்Apr 2, 2025 - 07:37:50 PM | Posted IP 172.7*****
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து இந்து மத மக்களின் குலதெய்வ வழிபாட்டிற்கு பங்குனி உத்திர திருநாள் மிகவும் முக்கியமான சிறப்பான நாள். அன்றைய தினம் தமிழக அரசு பொது விடுமுறை அளிக்கலாம்.குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிகமான குலதெய்வங்கள் உள்ளது.
மேலும் தொடரும் செய்திகள்

சிறுவனைத் தாக்கி கொலை மிரட்டல்: டிரைவர் கைது!
சனி 5, ஏப்ரல் 2025 8:28:56 PM (IST)

தொகுதி மறு வரையறைக்காக தமிழக மக்கள் ஒன்றிணைய வேண்டும் : அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
சனி 5, ஏப்ரல் 2025 8:15:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ஜெகத்ரட்சகன் எம்பி சுவாமி தரிசனம்
சனி 5, ஏப்ரல் 2025 4:57:27 PM (IST)

தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணை கைதி இறந்த வழக்கில் 9பேருக்கு ஆயுள் தண்டனை
சனி 5, ஏப்ரல் 2025 4:40:15 PM (IST)

நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் : மாணவர்களுக்கு ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுரை!
சனி 5, ஏப்ரல் 2025 4:08:38 PM (IST)

கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
சனி 5, ஏப்ரல் 2025 3:57:53 PM (IST)

Santhosh KumarApr 2, 2025 - 09:59:29 PM | Posted IP 162.1*****