» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் ஜெகத்ரட்சகன் எம்பி சுவாமி தரிசனம்

சனி 5, ஏப்ரல் 2025 4:57:27 PM (IST)



திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சுவாமி தரிசனம் செய்தார். 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் கடலில் நீராடினர். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி மான ஜெகத்ரட்சகன் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். 

அவர் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் செல்லக்கனி விருந்தினர் மாளிகைக்கு வருகை புரிந்தார். பின்னர் பேட்டரி கார் மூலம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏபி ரமேஷ், நகர செயலாளர் வாள் ஆர் சுடலை, நிர்வாகிகள் கேடிசி முருகன், தோப்பூர் சுரேஷ், திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital






New Shape Tailors


CSC Computer Education



Thoothukudi Business Directory