» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மண்வெட்டியால் தாக்கப்பட்ட ரயில்வே ஊழியர் சாவு: கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரணை!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 3:52:41 PM (IST)
தூத்துக்குடி அருகே குடும்ப பிரச்னையில் மண் வெட்டியால் தாக்கப்பட்ட ரயில்வே ஊழியர் சிசிச்சை பலனின்றி இறந்தார், இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம்,புதுக்கோட்டையை அடுத்த மேலக்கூட்டுடன் காடு, நடுத் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (41). ரயில்வேயில் 'கேங்மெனாக' வேலை பார்த்து வந்தார். இவர் அதே ஊர் மேலத் தெருவைச் சேர்ந்த ரமேஷ் (23) என்பவரின் அக்காள் மகராசியை திருமணம் செய்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடிபோதையில் ரமேஷ் வீட்டுக்கு சென்று அவரது தாய் ஆறுமுகத்தம்மாளை அவதூறாக பேசினார். இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், வேல்முருகனை அங்கு கிடந்த மண்வெட்டியை எடுத்து அதன் கணையால் தலையில் சரமாரியாக அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த வேல்முருகனை உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் இறந்தார். இதையடுத்து புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்ஐ மாணிக்கராஜா ஆகியோர் ஏற்கனவே பேரூரணி சிறையில் அடைக்கப்பட்ட மைத்துனர் ரமேஷ் மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணைந நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










