» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மண்வெட்டியால் தாக்கப்பட்ட ரயில்வே ஊழியர் சாவு: கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரணை!

செவ்வாய் 8, ஏப்ரல் 2025 3:52:41 PM (IST)

தூத்துக்குடி அருகே குடும்ப பிரச்னையில் மண் வெட்டியால் தாக்கப்பட்ட ரயில்வே ஊழியர் சிசிச்சை பலனின்றி இறந்தார், இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம்,புதுக்கோட்டையை அடுத்த மேலக்கூட்டுடன் காடு, நடுத் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (41). ரயில்வேயில் 'கேங்மெனாக' வேலை பார்த்து வந்தார். இவர் அதே ஊர் மேலத் தெருவைச் சேர்ந்த ரமேஷ் (23) என்பவரின் அக்காள் மகராசியை திருமணம் செய்துள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடிபோதையில் ரமேஷ் வீட்டுக்கு சென்று அவரது தாய் ஆறுமுகத்தம்மாளை அவதூறாக பேசினார். இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், வேல்முருகனை அங்கு கிடந்த மண்வெட்டியை எடுத்து அதன் கணையால் தலையில் சரமாரியாக அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த வேல்முருகனை உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் இறந்தார். இதையடுத்து புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்ஐ மாணிக்கராஜா ஆகியோர் ஏற்கனவே பேரூரணி சிறையில் அடைக்கப்பட்ட மைத்துனர் ரமேஷ் மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணைந நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory