» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செல்போன் டவர் அமைத்து தருவதாக மோசடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

புதன் 2, ஏப்ரல் 2025 5:39:21 PM (IST)

செல்போன் டவர் அமைத்து தருவதாக நடைபெற்று வரும் மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக Prime India Tower மற்றும் பல கம்பெனியின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக செல்போன் மூலம் அறிமுகமாகி Airtel cell Phone 5G டவர் அமைப்பதற்கு இடம் தேவைப்படுவதாக நம்பத்தகுந்த வார்த்தைகளை கூறி, பின்னர் ஆதார், பான் கார்டு மற்றும் இடம் சம்பந்தமான ஆவணங்களை கேட்டு பெற்றுக்கொண்டு டவர் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறி advance payment, document charges, GST,Aadvocate fees, Etc., என பல்வேறு காரணங்களை கூறி வெவ்வேறு வங்கி கணக்குகளை அனுப்பி பணத்தைப் பெற்று மோசடி செய்ய முனையும் குற்றங்கள் தற்போது சைபர் குற்றவாளிகளால் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் இதுபோன்ற சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டால் உடனடியாக இலவச உதவி எண் 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும் என்று மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors


CSC Computer Education



Thoothukudi Business Directory