» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செல்போன் டவர் அமைத்து தருவதாக மோசடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
புதன் 2, ஏப்ரல் 2025 5:39:21 PM (IST)
செல்போன் டவர் அமைத்து தருவதாக நடைபெற்று வரும் மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக Prime India Tower மற்றும் பல கம்பெனியின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக செல்போன் மூலம் அறிமுகமாகி Airtel cell Phone 5G டவர் அமைப்பதற்கு இடம் தேவைப்படுவதாக நம்பத்தகுந்த வார்த்தைகளை கூறி, பின்னர் ஆதார், பான் கார்டு மற்றும் இடம் சம்பந்தமான ஆவணங்களை கேட்டு பெற்றுக்கொண்டு டவர் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறி advance payment, document charges, GST,Aadvocate fees, Etc., என பல்வேறு காரணங்களை கூறி வெவ்வேறு வங்கி கணக்குகளை அனுப்பி பணத்தைப் பெற்று மோசடி செய்ய முனையும் குற்றங்கள் தற்போது சைபர் குற்றவாளிகளால் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் இதுபோன்ற சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டால் உடனடியாக இலவச உதவி எண் 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும் என்று மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் தூத்துக்குடி வருகை : விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
சனி 5, ஏப்ரல் 2025 12:46:12 PM (IST)

தூத்துக்குடியில் 3 கோஷ்டிகளாக தவெக ஆர்ப்பாட்டம்!
சனி 5, ஏப்ரல் 2025 12:20:39 PM (IST)

செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சனி 5, ஏப்ரல் 2025 11:49:03 AM (IST)

தூத்துக்குடியில் விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!
சனி 5, ஏப்ரல் 2025 11:39:59 AM (IST)

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: தாய்-மகன் பரிதாப சாவு!
சனி 5, ஏப்ரல் 2025 10:47:32 AM (IST)

தூத்துக்குடியில் மனைவியை தாக்கிய கணவர் கைது!
சனி 5, ஏப்ரல் 2025 10:31:55 AM (IST)
