» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: தாய்-மகன் பரிதாப சாவு!
சனி 5, ஏப்ரல் 2025 10:47:32 AM (IST)
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாய்-மகன் உயிரிழந்தனர்.
சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த சித்தன் மகன் ராஜ்குமார் (35). இவர் மொபைல் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி தமிழரசி (26), மகன் அஸ்வரதன் (5) மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் ஒரு காரில் நேற்று இரவு புறப்பட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். காரை ராஜ்குமார் ஓட்டினார்.
கார் இன்று அதிகாலை மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே உள்ள துரைச்சாமிபுரம் விலக்கு பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ராஜ்குமாரின் மனைவி தமிழரசி, அவரது மகன் அஸ்வரதன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் காரில் சென்ற அண்ணாமலை மனைவி விஜயா (60) செல்வராஜ் மனைவி தாமரைச் செல்வி என்ற சந்தியா (31), மகன் சபரீசன் (12), சித்தன் மகள் சுமதி (46), கோவிந்தராஜ் மகள் ரம்யா (12), காரை ஓட்டி சென்ற ராஜ்குமார் (35) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி : தூத்துக்குடி அருகே பரிதாபம்!
புதன் 9, ஏப்ரல் 2025 10:48:26 AM (IST)

தூத்துக்குடியில் நிலதரகர் தூக்குபோட்டு தற்கொலை
புதன் 9, ஏப்ரல் 2025 10:42:43 AM (IST)

கஞ்சா வழக்கில் திமுக கவுன்சிலரின் மகன் உட்பட 6பேர் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 9, ஏப்ரல் 2025 10:31:02 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
புதன் 9, ஏப்ரல் 2025 10:13:23 AM (IST)

சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா மாவிளக்கு ஊர்வலம்
புதன் 9, ஏப்ரல் 2025 10:07:32 AM (IST)

பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்ற 2பேர் கைது
புதன் 9, ஏப்ரல் 2025 8:45:08 AM (IST)
