» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேருக்கு சிறை தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 9, ஏப்ரல் 2025 8:42:58 AM (IST)

தூத்துக்குடியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2  பேருக்கு தலா 3 ஆண்டு மற்றும் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

தூத்துக்குடி மறவன்மடத்தை சேர்ந்த சக்திவேல் மகன் ஜெபராஜ் (27), கதிர்வேல் நகரை சேர்ந்த ஜான் கென்னடி மகன் சூரியராஜன் (34), புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டி மகன் ஜோசுவாராஜ் (25) ஆகிய 3 பேரும் கடந்த 2019-ம் ஆண்டு 9 வயது மற்றும் 15 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், குற்றம் சாட்டப்பட்ட ஜெபராஜ், சூரியராஜன் ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், ஜோசுவாராஜ்க்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முத்துலட்சுமி ஆஜர் ஆனார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory