» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்ற 2பேர் கைது

புதன் 9, ஏப்ரல் 2025 8:45:08 AM (IST)

கோவில்பட்டியில் பஸ்நிறுத்தம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்தித்தோப்பு கணேஷ் நகரை சேர்ந்த உலகநாதன் மகன் ராஜா (29). இவரும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி இடயான்குளம் இந்திரா காலனியை சேர்ந்த பாலமுருகன் மகன் மணிகண்டன் (19) என்பவரும் அங்குள்ள பஸ்நிறுத்தம் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்தனராம். 

இதுகுறித்த தகவலின் பேரில் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர். போலீசாரை பார்த்தவுடன் அந்த 2பேரும் தப்பி ஓடினர். போலீசார் அந்த 2பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory