» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி : தூத்துக்குடி அருகே பரிதாபம்!

புதன் 9, ஏப்ரல் 2025 10:48:26 AM (IST)

தூத்துக்குடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி அயனடைப்பு ஏ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் ஆனந்த கண்ணன் (36). இவர் ஆறுமுகமங்கலம் கோவிலுக்கு பைக்கில் சென்று காெண்டிருந்தார். சாயர்புரம் சாலை சந்திப்பு பெரும்படை சாஸ்தா கோவிலுக்கு அருகே செல்லும்போது, சாலையோரத்தில் கம்புகள் ஏற்றியவாறு நிறுத்தியிருந்த டிராக்டரில் பைக் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த கண்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory