» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி : தூத்துக்குடி அருகே பரிதாபம்!
புதன் 9, ஏப்ரல் 2025 10:48:26 AM (IST)
தூத்துக்குடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அயனடைப்பு ஏ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் ஆனந்த கண்ணன் (36). இவர் ஆறுமுகமங்கலம் கோவிலுக்கு பைக்கில் சென்று காெண்டிருந்தார். சாயர்புரம் சாலை சந்திப்பு பெரும்படை சாஸ்தா கோவிலுக்கு அருகே செல்லும்போது, சாலையோரத்தில் கம்புகள் ஏற்றியவாறு நிறுத்தியிருந்த டிராக்டரில் பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த கண்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










