» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மனைவியை தாக்கிய கணவர் கைது!

சனி 5, ஏப்ரல் 2025 10:31:55 AM (IST)

தூத்துக்குடியில் அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரத்தில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குகுளி காலனியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மகன் எட்வர்ட் (30), இவர் மேட்டுப்பட்டியை சேர்ந்த சிலிசியா (25) என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிலிசியா அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருப்பாராம். இதை அவரது கணவர் பல தடவை கண்டித்து உள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 12 மணி வரை செல்போனில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த எட்வர்ட் ஆத்திரமடைந்து, செல்போனை உடைத்து மனைவியை சரமாரியாக தாக்கினாராம். இதில் காயமடைந்தவர் சிலிசியா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எட்வர்டை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital

New Shape Tailors








Thoothukudi Business Directory