» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மனைவியை தாக்கிய கணவர் கைது!
சனி 5, ஏப்ரல் 2025 10:31:55 AM (IST)
தூத்துக்குடியில் அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரத்தில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குகுளி காலனியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மகன் எட்வர்ட் (30), இவர் மேட்டுப்பட்டியை சேர்ந்த சிலிசியா (25) என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிலிசியா அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருப்பாராம். இதை அவரது கணவர் பல தடவை கண்டித்து உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 12 மணி வரை செல்போனில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த எட்வர்ட் ஆத்திரமடைந்து, செல்போனை உடைத்து மனைவியை சரமாரியாக தாக்கினாராம். இதில் காயமடைந்தவர் சிலிசியா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எட்வர்டை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி திமுக பெண் கவுன்சிலர் மீது நடவடிக்கை: பாஜக கோரிக்கை!
புதன் 9, ஏப்ரல் 2025 8:36:13 PM (IST)

நாசரேத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா
புதன் 9, ஏப்ரல் 2025 8:27:29 PM (IST)

வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர் பலகை வைக்க மே 15வரை அவகாசம் : ஆட்சியர் தகவல்!
புதன் 9, ஏப்ரல் 2025 8:12:56 PM (IST)

ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் தொல்லியல் அகழாய்வு முறைகள் பயிற்சிப் பட்டறை
புதன் 9, ஏப்ரல் 2025 8:08:03 PM (IST)

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி கணினி துறையில் பிரிவு உபசாரவிழா!
புதன் 9, ஏப்ரல் 2025 5:20:27 PM (IST)

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் பங்கேற்பு
புதன் 9, ஏப்ரல் 2025 4:51:32 PM (IST)
