» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி கணினி துறையில் பிரிவு உபசாரவிழா!

புதன் 9, ஏப்ரல் 2025 5:20:27 PM (IST)



நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் கணினிதுறை அசோசியேஷன் சார்பில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசாரவிழா நடைபெற்றது.

விழாவில் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை தாங்கி தலைமையுரை நிகழ்த்தினார். முன்னதாக கணினிதுறை பேராசிரியை ரெஜினா நிருபா ஆரம்ப ஜெபம் செய்தார். மாணவி பிரிசில்லா வேதபாடம் வாசித்தார். துறைத்தலைவர் பிரபாகர் வரவேற்புரை நிகழ்த்தினார். 

இவ் விழாவில் பருவ தேர்வில் முதலிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவியர்கள் கல்லூரியின் சிறப்புகள், படிக்கும் போது நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வுகளை எடுத்துக் கூறினர். பின்னர் இறுதி ஆண்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

விழாவில் துறைத்தலைவர்கள் சோபியா, சிவமுருகன், பிரபாகர், சிவமுருகன், பிரபாகர் வேத சிரோமணி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கல்லூரி பர்சர் தனபால் வாழ்த்துரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ரவீந்திரன் சார்லஸ் ஆலோசனையின் பேரில் முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் மற்றும் கணினி துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory