» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!
சனி 5, ஏப்ரல் 2025 11:39:59 AM (IST)

ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் மில்லர் புரத்தில் அமைந்துள்ள பிஎம்சி மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு தமிழக அரசு ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மேலும் பழைய ஓய்வு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதிக்கீடு உள்ளிட்ட அரசின் சலுகைகள் அனைத்தும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முதுகலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை மே மாதத்திலேயே நடத்தி முடிக்க வேண்டும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பி நிரந்தர பணியிடமாக மாற்ற வேண்டும் ஊதிய உயர்வு மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மாரி செல்வம், மாவட்ட சட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட செய்தி தொடர்பாளர் பாரதிராஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:44:24 AM (IST)

தூய இம்மானுவேல் ஆலயத்தில் பெண்கள் பண்டிகை!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:35:04 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபரை கொல்ல முயற்சி: 7பேர் கும்பல் கைது - ஆயுதங்கள் பறிமுதல்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 11:19:49 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 10:23:50 AM (IST)

குளத்தில் பெண் உடல் மீட்பு: போலீஸ் விசாரணை
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 10:14:34 AM (IST)

கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு : குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இறக்குமதி
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:26:16 AM (IST)

நான் தான்Apr 6, 2025 - 07:50:58 AM | Posted IP 104.2*****