» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் : 272 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 782பேர் பங்கேற்பு!

புதன் 2, ஏப்ரல் 2025 11:15:44 AM (IST)

தூத்துக்குடியில் டவுன் ஏ.எஸ்.பி.,யை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன் மற்றும் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் ஆகியோர் வழக்கறிஞர்கள் தொழிலுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறி வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  போராட்டத்தில் 272 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 782 வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று (ஏப்.2) பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் பொதுக்குழு கூட்டம் சங்கத்தில் வைத்து தலைவர் தனசேகர் டேவிட் தலைமையில், செயலாளர் செல்வின் முன்னிலையில் நடைபெறும் என சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors

Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory