» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவசாயியிடம் செல்போன் திருட்டு: 3பேர் கைது

புதன் 2, ஏப்ரல் 2025 7:53:48 AM (IST)

முக்காணியில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த விவசாயியிடம் செல்போனை திருடிச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், முக்காணியிலுள்ள முதலி­யார் தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் மகன் கண்ணையா (28). விவசாயியான இவர், கடந்த மார்ச் 31ம் தேதி இரவு காந்திநகர் படித்துறை அருகே செல்போன் டார்ச் வெளிச்சத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது, மது போதையில் வந்த அதே ஊர் சந்தனமாரியம்மன் கோயில் தெரு முருகன் மகன் முத்துராஜ் (24), ஆறுமுககுமார் (24), பெரியசாமி (40) ஆகியோர் அவரது செல்போனை திருடிச் சென்றனராம். கண்ணையா விரட்டிச் சென்றபோது, அவர்கள் அவதூறாகப் பேசி மிரட்டினராம். புகாரின்பேரில், ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital



New Shape Tailors






Thoothukudi Business Directory