» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கடலில் கல்வெட்டு கண்டெடுப்பு: ஆய்வு செய்ய பக்தர்கள் கோரிக்கை!

புதன் 2, ஏப்ரல் 2025 7:44:32 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் 4 அடி உயரக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அண்மைக்காலமாக, அமாவாசை நாள்களில் கடல் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புவதும் தொடர்கிறது. இந்நிலையில், அமாவாசையான சில நாள்களுக்கு முன்பு, கடல்நீர் சுமார் 50 அடி தொலைவுக்கு உள்வாங்கியது. இதில், கரை ஒதுங்கிக் கிடந்த சுமார் 4 அடி உயரக் கல்வெட்டை, பௌர்ணமி சித்தர் கண்டெடுத்தாராம்.

அதில், ‘கந்த மாதன தீர்த்தம்’ எனத் தொடங்கி சில வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தக் கல்வெட்டு உள்ளிட்ட அண்மைக்காலமாக கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளை கோயில் நிர்வாகம் உரிய முறையில் பாதுகாப்பதுடன், தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education




New Shape Tailors





Thoothukudi Business Directory