» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் திருட்டு: 2 சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு!

திங்கள் 31, மார்ச் 2025 8:10:02 AM (IST)

கழுகுமலையில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை திருமாளிகை தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் காலேப்ராஜ் (28). டிரைவர். சம்பவத்தன்று இரவில் இவரது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். மறுநாள் காலையில் பார்த்தபோது மர்மநபர்கள் அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது. 

இதுகுறித்துஅவர் அளித்த புகாரின் பேரில், கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வரும் கழுகுமலை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனும், 17 வயது சிறுவனும் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது. 

இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த அந்த 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. இதையடுத்து கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட அந்த 2 சிறுவர்களும் தூத்துக்குடி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education



New Shape Tailors



Thoothukudi Business Directory