» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டெலஸ்கோப்பில் பௌர்ணமி நிலவு, கோள்களை கண்டு வியந்த பொதுமக்கள்!

வெள்ளி 14, மார்ச் 2025 10:25:53 AM (IST)



கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல்முருகன் கோவில் வளாகத்தில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு டெலஸ்கோப்பில் பௌர்ணமி நிலா, வியாழன், செவ்வாய் கோள்களை பொதுமக்கள் கண்டு வியந்தனர்.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட அஸ்ட்ரோ கிளப்புகளை உருவாக்கி அதன் மூலம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் பரப்பரை செய்து வருகிறது. இந்தாண்டு 5000 இடங்களில் அஸ்ட்ரானமி,ஆயிரம் இடங்களில் அஸ்ட்ரானமி ஆய்வகம்,விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலையில் வைக்கப்பட்டுள்ள டெலஸ்கோப் மூலம் கோவிலுக்கு வருகை வந்த பக்தர்கள் வானில் தெரிந்த பௌர்ணமி நிலா மற்றும் வியாழன், செவ்வாய் கோள்களை பார்வையிட்டு வியந்தனர். தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன், டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் வானவியல் குறித்தும் கோள்கள் குறித்து விளக்கி கூறினர்.

இதில் கோவில்பட்டி விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கர் குடும்பத்துடன் வருகை தந்து டெலஸ்கோப்பில் நிலாவினை பார்வையிட்டார், இதில் கோவிலுக்கு வருகை தந்த ஏராளமான பொதுமக்கள் அனைவரும் டெலஸ்கோப்பில் பௌர்ணமி நிலா, வியாழன் ,செவ்வாய்,கோள்களை பார்வையிட்டு வியந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory