» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சைபர் மோசடி குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!
வெள்ளி 14, மார்ச் 2025 9:15:22 PM (IST)
சைபர் மோசடி குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொண்டு விழிப்புடன் இருக்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
தற்போது பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் நிறுவனங்களில் உயர் பதவியில் இருக்கும் நபர்களின் புகைப்படங்களை வைத்து போலியாக வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை தொடர்பு கொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்கு விவரங்கள் உட்பட நிறுவனம் சார்ந்த அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மோசடி செய்யும் புதிய யுக்தி தற்போது சைபர் குற்றவாளிகளால் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரிய நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களின் நலன் கருதி மேற்படி சைபர் மோசடி குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொண்டு விழிப்புடன் இருக்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மேலும் இந்த சைபர் மோசடி குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சைபர் குற்ற உதவி எண் 1930 மற்றும் cybercrime.gov.in என்ற சைபர் குற்ற இணையதளம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இறந்த பெண்ணின் உடலில் இருந்த நகை திருடிய வாலிபர் கைது: துக்க வீட்டில் கைவரிசை!
சனி 15, மார்ச் 2025 8:52:36 AM (IST)

விண்வெளி தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
சனி 15, மார்ச் 2025 8:45:40 AM (IST)

தமிழக பட்ஜெட்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள் பட்டியல்!
சனி 15, மார்ச் 2025 8:41:34 AM (IST)

தூத்துக்குடி கடல் பகுதியில் புதிய விலாங்கு மீன் இனம் கண்டுபிடிப்பு!
சனி 15, மார்ச் 2025 8:29:49 AM (IST)

வெறிநாய்கள் கடித்து குதறியதில் 30 ஆடுகள் பலி
சனி 15, மார்ச் 2025 8:27:26 AM (IST)

தூத்துக்குடியில் 3¼ கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
சனி 15, மார்ச் 2025 8:19:14 AM (IST)
