» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேல்மாந்தை பெத்தனாட்சியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!

செவ்வாய் 18, மார்ச் 2025 8:42:41 AM (IST)



மேல்மாந்தை ஸ்ரீ பெத்தனாட்சியம்மன் திருக்கோவிலில் மாசிமாத கடைசி வெள்ளியை முன்னிட்டு தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது..

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் திருக்கோவிலில், மாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். 

மேலும் கடைசி வெள்ளியை முன்னிட்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். புகழ்பெற்ற இந்த பெத்தனாட்சி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதையொட்டி ஏராளமான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை!

செவ்வாய் 18, மார்ச் 2025 12:08:51 PM (IST)

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors





CSC Computer Education



Thoothukudi Business Directory