» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை!
செவ்வாய் 18, மார்ச் 2025 12:08:51 PM (IST)
தூத்துக்குடியில் 2வது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காலனி தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் கணேசன் (37). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கணேசனுக்கு, தூத்துக்குடி ஜேஜே நகரில் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த கணேசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)

காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 8:06:39 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:03:24 PM (IST)

ரயிலில் பெண்கள் பாதுகாப்புக்கு வாட்ஸ்அப் குழு : தூத்துக்குடியில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு!
செவ்வாய் 18, மார்ச் 2025 7:58:52 PM (IST)

பெண் குழந்தைகளைக் காப்போம் குறும்பட போட்டி: ஏப்.5 வரை பதிவேற்றம் செய்யலாம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 5:44:41 PM (IST)

தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைவது உறுதி : எஸ்.பி.சண்முக நாதன் பேச்சு
செவ்வாய் 18, மார்ச் 2025 5:09:55 PM (IST)
