» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!

செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)

தூத்துக்குடியில் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன இரவு வாட்ச்மேன் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து மகன் முருகன் (63), இவர் எட்டையாபுரம் ரோட்டில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கம்பெனியில் இரவு வாட்ச்மேன் ஆக வேலை பார்த்து வருகிறார். இன்று மாலை வேலைக்கு செல்வதற்காக 6.30 மணி அளவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். எட்டையாபுரம் ரோடு ஜோதி நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஒரு கார் இவரது சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்  சைரஸ் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை  பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் திருச்செந்தூர் நந்த குமாரபுரத்தை சேர்ந்த கலைச்செல்வன்  மகன் ராமநாதன் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory