» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி : மனைவி கண் முன்னே பரிதாபம்

திங்கள் 17, மார்ச் 2025 9:39:32 PM (IST)

தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி தாளமுத்து நகர் ராமதாஸ் நகர், ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் மோகன்ராஜ் (28), இவரது மனைவி வள்ளி (25), கணவன் மனைவி இருவரும் ரோட்டில் பிளாஸ்டிக், பேப்பர் சேகரித்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இன்று காலையில் கோரம்பள்ளம் பகுதியில் கழிவு பொருட்களை எடுத்து சாக்கு பையில் கட்டி வைத்துவிட்டு பெரிய நாயகிபுரத்தில் உள்ள குளத்தில் மோகன்ராஜ் குளிக்க சென்றாராம்.

அப்போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் ஏற்படவே தண்ணீரில் மூழ்கினார். இதில் சிறிது நேரத்தில் மனைவி கண் முன்னே அவர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

New Shape Tailors






Arputham Hospital



Thoothukudi Business Directory