» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பி.எஸ்.என்.எல். சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெள்ளி 14, மார்ச் 2025 9:18:46 PM (IST)


தூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல். சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி பி.எஸ்.என்.எல். அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியை தொலை தொடர்பு பொது மேலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய  உறுப்பினர் ஆ.சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பி.எஸ்.என்.எல். சேவையை பாராட்டி பேசினார். அதோடு ஆன்லைனில் பணம் செலுத்தும் போது ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். 

உதவி பொது மேலாளர்கள் ஆறுமுகசாமி மற்றும் சாந்தி ஆகியோர் பி.எஸ்.என்.எல். சேவை குறித்து பேசினர்.  துணை பொது மேலாளர் லிங்க பாஸ்கர்  பி.எஸ்.என்.எல். திட்டங்கள் குறித்து பேசினார். முன்னதாக பி.எஸ்.என்.எல். அலுவலர் சேர்மதுரை வரவேற்புரை ஆற்றினார். நேதாஜி நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிகளை  பி.எஸ்.என்.எல். அலுவலர் எஸ்கலின் தொகுத்து வழங்கினார். இதில் ஏராளமான தொலை தொடர்பு துறை நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors

CSC Computer Education





Thoothukudi Business Directory