» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேம்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு

வெள்ளி 14, மார்ச் 2025 8:24:52 AM (IST)

கீழ ஈரால் பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் தூத்துக்குடி - மதுரை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே கீழ ஈரால் கிராமத்தில் ரோட்டை கடக்க முயன்றபோது பைக் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், கீழ ஈரால் பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரி அப்பகுதி மக்கள் நேற்று மாலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் தூத்துக்குடி - மதுரை ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அல்பர்ட் ஜான் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் போக்குவரத்து சீரானது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors



CSC Computer Education



Thoothukudi Business Directory