» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளம் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

சனி 11, ஜனவரி 2025 8:49:31 PM (IST)

சாத்தான்குளம் புதிய காவல் ஆய்வாளராக ராஜ் இன்று பொறுப்பேற்று கொண்டார் 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஏசு ராஜசேகரன் நாகர்கோவில் உள்ள காவல் நிலையத்தில் பணி புரிந்த போது முறைகேட்டில் ஈடுபட்டதாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின்னர் குமரி போலீசாரில் கைது செய்யப்பட்டார். அதன்பின் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் நியமிக்கப்படாமல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாககுமாரி, கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். 

இந்நிலையில் ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜ், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று சாத்தான்குளம் ஆய்வாளராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital






Thoothukudi Business Directory