» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கைவிடப்பட்ட மூதாட்டிக்கு கைக்கொடுத்த நல் உள்ளங்கள் : பொதுமக்கள் பாராட்டு!

சனி 11, ஜனவரி 2025 8:09:04 PM (IST)



தூத்துக்குடியில் கைவிடப்பட்ட மூதாட்டிக்கு ஆதரவளித்த மீனவன் மக்கள் சேவை அறக்கட்டளை நிர்வாகிகளை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். 

தூத்துக்குடி மாதவன்நாயர் காலனி பகுதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட மூதாட்டி நாகக்கனி என்பவர் மழையிலும் வெயிலிலும் ரோட்டோரத்தில் இருந்து உள்ளார். இது குறித்து மீனவன் மக்கள் சேவை அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மூதாட்டியை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர். மீனவன் மக்கள் சேவை அறக்கட்டளையினர் இரத்ததானம் மற்றும் சாலையோர ஆதரவற்றோர்களுக்கு தங்களது நண்பர்கள் உதவியுடன் சமூக சேவைகள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory