» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் களைகட்டும் கேரளா பர்னிச்சர் கண்காட்சி
வெள்ளி 25, அக்டோபர் 2024 8:02:54 PM (IST)
தூத்துக்குடி ராமையா மஹாலில் நடைபெற்று வரும் கேரளா பர்னிச்சர் கண்காட்சியில் குறைந்த விலையில் பர்னிச்சர்கள் கிடைப்பதால் விற்பனை களைகட்டியுள்ளது.
தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் அமைந்துள்ள ராமையா மஹாலில் மக்கள் விரும்பும் வகையில் கேரளா பர்னிச்சர் கண்காட்சி நடைபெற்று வருகின்றது. கண்காட்சியில் வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்கள், சோபா, டைனிங் டேபிள் செட் மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான பிரத்யோகமான வடிவில் உருவாக்கப்பட்ட பர்னிச்சர்கள் உயர்ந்த தரத்தில் குறைந்த விலையில் உற்பத்தி விலையிலேயே கிடைக்கிறது.
இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வாங்கி செல்கின்றனர். உலகப் புகழ்பெற்ற மைசூர் கேண்ட் கார்விங் பர்னிச்சர்கள், நீலாம்பூர் தேக்கு மர வகைகளால் வடிவமைக்கப்பட்ட பர்னிச்சர்கள், பழங்கால அரிய வகை மாடல்களில் உருவாக்கப்பட்ட அரண்மனை மாடல் பர்னிச்சர்கள், விதவிதமான மாடல்களில் கட்டில், காம்பெக்ட் பெட்ரூம் செட், கார்னர் சோபா மெத்தை, டீ பாய்கள், டிரெஸ்ஸிங் டேபிள், பீரோ, கிடைக்கிறது.
சிறப்பு மர வகைகளில் எங்கள் சொந்த தயாரிப்பில் உருவாக்கப்பட்ட பர்னிச்சர்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து வகை பர்னிச்சர்கள் திருமண சீர்வரிசைக்கு தேவையான பர்னிச்சர்களும் ஒரே இடத்தில் 60 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது. கண்காட்சி அக்டோபர் 29-ஆம் தேதி வரை தினமும் காலை 10.00 மணிமுதல் இரவு 9.30 மணிவரை நடைபெறும்.
எண்ணிலடங்கா விதவிதமான பர்னிச்சர்களை தாங்கள் விரும்பும் வகையில் எங்களது கம்பெனி அரிய வகை தள்ளுபடியுடன் பெற்றுச்செல்ல அன்புடன் அழைக்கின்றோம்.மேலும் பண்டிகை தினங்களில் அல்லது தாங்கள் விரும்பும் தேதியில் எடுக்க வேண்டிய பர்னிச்சரை இப்போதே ஆஃபர் தொகையில் புக் செய்து முன்பணம் கட்டி தாங்கள் விரும்பும் தேதியை கூறினால் அந்த தேதியில் குறித்த இடத்தில் இலவசமாக டோர் டெலிவரி செய்து தருகிறோம்.இந்த அரிய வாய்ப்பை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள் என உரிமையாளர் நவ்ஷாத், மேலாளர் பினிஷ் மேத்யூ தெரிவித்தனர்.