» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது
வெள்ளி 25, அக்டோபர் 2024 7:27:26 PM (IST)
கோவில்பட்டியில் கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி சீனிவாச நகரை சேர்ந்த கணேசன் மகன் பாலாஜி (29) மற்றும் கோவில்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்த கணபதி மகன் சுப்ரமணிகண்டன் (26) ஆகிய இருவரையும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் இன்று (25.10.2024) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.