» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலையில் கால்நடைகளை திரியவிட்டால் அபராதம் : தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை!
வெள்ளி 25, அக்டோபர் 2024 5:40:15 PM (IST)
தூத்துக்குடியில் பொது இடங்களில் கால்நடைகளை திரியவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாநகராட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதால் மாடுபிடிக்கும் பணியாளர்களைக் கொண்டு மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் பிடிக்கும் பணி நடைபெற உள்ளது.
எனவே பொது மக்கள் தங்களது கால்நடைகளை பொது இடங்களில் சுற்றி திரிய விடாமல் அவரவர் வீட்டில் பராமரித்திட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் தெரிவித்துள்ளார்.
SenthilOct 25, 2024 - 06:10:16 PM | Posted IP 162.1*****