» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாதயாத்திரை பக்தர்கள் ஓய்விடப் பூங்கா: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்

வெள்ளி 25, அக்டோபர் 2024 3:39:59 PM (IST)



தூத்துக்குடியில் ரூ. 3.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் ஓய்விடப்  பூங்காவை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். 

தூத்துக்குடி முத்தையாபுரம் பாலம் அருகில், ரூ. 3.35 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நடைப்பயண பக்தர்கள் ஓய்விடப்  பூங்கா மற்றும் ரூ. 90 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராஸ் நகர் பசுமைப் பூங்கா திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில், சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்பி கலந்து கொண்டு நடைப்பயண பூங்காவை திறந்து வைத்தார். 

இந்நிகழ்வில், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory