» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாதயாத்திரை பக்தர்கள் ஓய்விடப் பூங்கா: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
வெள்ளி 25, அக்டோபர் 2024 3:39:59 PM (IST)
தூத்துக்குடியில் ரூ. 3.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் ஓய்விடப் பூங்காவை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பாலம் அருகில், ரூ. 3.35 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நடைப்பயண பக்தர்கள் ஓய்விடப் பூங்கா மற்றும் ரூ. 90 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராஸ் நகர் பசுமைப் பூங்கா திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில், சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்பி கலந்து கொண்டு நடைப்பயண பூங்காவை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.