» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவர்களுக்கு கூலிப் விற்பனை: 2பேர் கைது; கடைகளுக்கு சீல்!

வெள்ளி 18, அக்டோபர் 2024 8:44:27 AM (IST)

கருங்குளத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘கூலிப்’ போதைப்பொருள் விற்றதாக 2 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த கருங்குளத்தில் அரசு பள்ளி அருகே மாணவர்களுக்கு சிலர் ‘கூலிப்’ போதைப்பொருள் விற்பனை செய்வதாக எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் நேற்று செய்துங்கநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் தர்மர் தலைமையில் சிறப்பு படை போலீசார் கருங்குளம் அரசு பள்ளிம் பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பள்ளிம் அருகே 2 பேர், மாணவர்களிடம் ‘கூலிப்’ போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். உடனடியாக போலீசார் அந்த 2 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்த போதைப் பொருட்களை பறிமுதல் ெசய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், செய்துங்கநல்லூர் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் அசோக்குமார் (49), வசவப்பபுரம் சர்ச் தெருவை சேர்ந்த சின்னதம்பி மகன் பாஸ்கர் (36) என்பதும் தெரியவந்தது.

இதில் அசோக்குமார் செய்துங்கநல்லூரிலும், பாஸ்கர் வசவப்பபுரத்திலும் பெட்டிக்கடை நடத்தி வருவதும், அவர்களின் கடைகளில் ‘கூலிப்’ மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 கடைகளிலும் சிறப்பு படை போலீசார் சோதனை நடத்தினர்.

அந்த கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 35 கிலோ போதைப்பொருட்கள் சிக்கின. அதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். பின்னர் 2 கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து செய்துங்கநல்லூர், வசவப்பபுரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors







Thoothukudi Business Directory