» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபரை அடித்துக்கொன்று ஓடையில் உடல்வீச்சு : 3பேர் கைது; பரபரப்பு தகவல்!

வெள்ளி 18, அக்டோபர் 2024 8:40:00 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபரை அடித்துக்கொன்று ஓடையில் உடலை வீசிய சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி அசோக்நகர் பகுதியில் உள்ள பக்கிள் ஓடையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்த நிலையில் கிடப்பதாக தென்பாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி மதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். 

அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில், கடந்த 15-ந் தேதி இரவு அந்த வாலிபர் நடந்து வருவதும், அப்போது, எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென வாலிபரை வழிமறித்து சரமாரியாக தாக்கி, பக்கிள் ஓடைக்குள் தூக்கி வீசும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார், ஓடையில் கிடந்தவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். 

தொடர்ந்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில் தூத்துக்குடி செல்சினிகாலனியை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் வல்லரசு (35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மதுபோதையில் வந்த 3 பேருக்கும், வல்லரசுக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. 

இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து வல்லரசை அடித்துக் கொலை செய்து, பிணத்தை பக்கிள் ஓடையில் வீசி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த கற்குவேல் (29), மாரியப்பன் (28), ராகுல் (27) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory