» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டெமு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் : தொழில் வணிக கழகம் கோரிக்கை!

வெள்ளி 18, அக்டோபர் 2024 10:13:04 AM (IST)

திருச்சி - காரைக்குடி - விருதுநகர் பயணிகள் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்று காரைக்குடி தொழில் வணிக கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக காரைக்குடி தொழில் வணிக கழகத்தின் தலைவர் சாமி திராவிடமணி, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தற்போது திருச்சி - காரைக்குடி - விருதுநகர் டெமு ரயில் சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள், அழகப்பா கலைக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தினமும் 300க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், திருச்சி, விருதுநகருக்கு பொதுமக்கள் மற்றும் ஏராளமானோர் நாள்தோறும் சென்று வருகின்றனர். திருச்சி - காரைக்குடி - விருதுநகர் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து, பயணிகளின் நலன் கருதி இடையூறு இல்லாமல் தினசரி ரயிலாக மாற்ற வேண்டும். விருதுநகர் ரயில் நிலையத்தில் ஒன்பது மணி நேரம் ரயில் நிற்கிறது. எனவே, இந்த ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital








Thoothukudi Business Directory