» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பேண்ட் மாஸ்டர் கல்லால் தாக்கி கொலை : நண்பர் கைது!
வெள்ளி 18, அக்டோபர் 2024 11:52:29 AM (IST)
தூத்துக்குடியில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில், பேண்ட் மாஸ்டரை கல்லால் தாக்கி கொலை செய்த அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் தெய்வநாயகம் மகன் ஆபிரகாம் (64), இவர் பேண்ட் மாஸ்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது எதிர் வீட்டில் உமர் சாய்பு மகன் முகமது அலி ஜின்னா (50) என்பவர் குடியிருந்து வருகிறார். இருவரும் நண்பர்கள். நேற்று இரவு வீட்டில் வைத்து மது அருந்தினார்களாம். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த முகமது அலி ஜின்னா, ஆபிரகாம் மீது பாரங்கல்லை தூக்கி போட்டாராம். இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆபிரகாம் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை வழக்குப் பதிந்து முகமது அலி ஜின்னாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தை தூத்துக்குடி ஏஎஸ்பி மதன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.