» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக்கில் விபத்தில் ஆசிரியை பலி!

வெள்ளி 18, அக்டோபர் 2024 12:17:04 PM (IST)

தூத்துக்குடியில் மகனுடன் பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டு காயம் அடைந்த ஆசிரியை சிகிச்சை பலனின்றி இறந்தார். 

தூத்துக்குடி சிலுவைபட்டியை சேர்ந்தவர் பாலகுருசாமி மனைவி சீதாலட்சுமி (53), இவர் குறுக்கு சாலையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி பள்ளிக்கு செல்வதற்காக தனது மகன் ஜெயமுத்து கணேஷ் உடன் மோட்டார் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றாராம்.

கருப்பசாமி நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது பைக் திடீரென நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த சீதாலட்சுமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory