» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேரலையில் சிக்கி படகு கவிழ்ந்து விபத்து; மீனவர்கள் 14 பேர் மீட்பு: ரூ.15 லட்சம் சேதம்!

வியாழன் 17, அக்டோபர் 2024 9:12:28 PM (IST)



பெரியதாழை அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் தத்தளித்த 14 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இவ்விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பெரியதாழையைச் சேர்ந்த பழனி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 15ம்தேதி மீனவர்கள் 14 பேர் கடலுக்கு மீன்பிடிக்கசென்றனர். அவர்கள்மீன்பிடித்த நிலையில் நேற்று மாலை கரை திரும்பி கொண்டிருந்தனர். பொியதாழை கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் கடல் தொலைவில் கடலில் திடீரென ஆழிபேரலை ஏற்பட்டது. 

இதனால் பைபர்படகு, தொடர்ந்துசெல்ல முடியாமல் கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த மீனவர்கள் 14 பேரும் கடல்நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினர். ஒரு சிலர் நீந்தி கரைக்கு வந்துசேர்ந்து சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஊரில் இருந்த மற்ற மீனவர்கள், நடுக்கடலுக்குசென்று கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களை மீட்டனர். 

மேலும் பைபர்படகையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ராட்சத ஆழி பேரலையில் சிக்கிய பைபர் படகு சேதமானது. இன்ஜின் பழுதான நிலையில் வலைகள் முற்றிலும் சேதமானது. சுமார் ரூ.15 லட்சம்பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மீனவர்கள், மீன்வளத்துறைஅதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory