» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் என்.சி.சி சார்பில் பாலிதீன் ஒழிப்பு பேரணி

வியாழன் 17, அக்டோபர் 2024 8:15:30 PM (IST)



தூத்துக்குடியில் தேசிய மாணவா் படை சார்பில் பாலிதீன் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
 
தேசிய மாணவா் படை சார்பில் நாடுமுழுவதும் இன்று பாலிதீன் ஒழிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தூத்துக்குடி மாவட்டத்திலும் மாவட்ட என்.சி.சி தரைப்படை தனிப்பிரிவு கமாண்டிங் அதிகாரி லெப்டினட் கா்னல் பிரதோஷ் உத்தரவுபடி தூத்துக்குடியில் பாலிதீன் ஒழிப்பு பேரணியானது சிவந்தாகுளத்தில் ஆரம்பித்து தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் வரை நடைபெற்றது. 

இந்த பேரணியில் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி, காமராஜ் கல்லூரி மற்றும் சேவியா்ஸ் பள்ளி தேசிய மாணவா் படை மாணவா்கள் நூறு போ் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட என்.சி.சி தரைப்படை தனிப்பிரிவு கமாண்டிங் அதிகாரி லெப்டினட் கா்னல் பிரதோஷ் தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் தேசிய மாணவா்படை அலுவலா்கள் கேப்டன் ஹெலன் புளோரா, லெப்டினட் பட்சி ராஜன், சிலுவை மைக்கேல், சுபேதார்கள் சந்திரசேகா், வரதராஜன்,நாப் சுபேதார் ஜனார்தனன், ரவி, மற்றும் நரேந்தா் ஆகியோர் கலந்து கொண்டனா். இந்த பேரணியின் மூலம் ஒருமுறை பயன் படுத்தப்படும் பாலிதீன் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory