» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரிகளில் போதைக்கு எதிரான தடுப்பு குழு: நெல்லை சரக புதிய டிஐஜி அறிவுறுத்தல்!

வியாழன் 17, அக்டோபர் 2024 8:27:04 PM (IST)



கல்லூரிகளில் போதைக்கு எதிரான தடுப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என கலந்தாய்வு கூட்டத்தில் காவல்துறை சரக துணைத் தலைவர் பா. மூர்த்தி பேசினார்.

போதைக்கு எதிரான தடுப்பு குழுக்களை திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலுள்ள கல்லூரிகளில் அமைப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி நேருஜி கலையரங்கத்தில் நடந்தது. எம்பவர் இந்தியா கௌரவச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ.சங்கர் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்திற்கு காவல்துறை சரக துணைத் தலைவர் பா. மூர்த்தி தலைமை தாங்கினார்.

துவக்க உரை ஆற்றி போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டு பேசும் போது கூறியதாவது : கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கத்தைத் தடுக்க மூன்று கட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். முதற் கட்டமாக கல்லூரிகளில் போதைக்கு எதிரான தடுப்பு குழுக்கள் அமைக்கப்படும். அதன் மூலம் போதைக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். 

இரண்டாம் கட்டமாக கல்லூரிகளில் போதைக்கு எதிரான தடுப்பு குழுக்களின் உறுப்பினர்களுக்கு மாவட்ட வாரியாக ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெறும். மூன்றாம் கட்டமாக கல்லூரி வாரியாக மாணவர்களுக்கு போதை தவிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். போதைப் பொருட்கள் குறித்த தகவல்களை 10581 என்ற எண்ணில் அளிக்கலாம் என அவர் கூறினார்.

இக்கூட்டத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பொது மேலாளர் அசோக் குமார் சிறப்புரை ஆற்றினார். திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் இரவீந்திரன், அண்ணா பொறியியல் பல்கலைக்கழக டீன் செண்பக விநாயக மூர்த்தி ஆகியோர் கருத்துரை ஆற்றினர். திருநெல்வேலி மாவட்ட மது விலக்குத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சிநாதன் நன்றியுரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மது விலக்குத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் அருள், தென்காசி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சாந்த மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலுள்ள கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவல் துறையினர் மற்றும் எம்பவர் மேலாளர் லலிதாம்பிகை, தீபக் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory