» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சோலார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

சனி 21, செப்டம்பர் 2024 8:38:09 AM (IST)

கயத்தாறு அருகே தனியார் சோலார் சோலார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மீனாட்சிபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பெரியகுருவு மகன் காளிமுத்து (30). இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கயத்தாறு அருகே மானங்காத்தானில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்திற்கு நண்பர்களுடன் 10 பேர் வேலைக்காக வந்துள்ளார். மானங்காத்தானில் ஒரு அறையில் தங்கி வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று அவர், தங்கியிருந்த அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை நண்பர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன காளிமுத்துவிற்கு, காவேரி(24) என்ற மனைவியும், தரிகாசிணி என்ற 3 வயது மகளும் உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory