» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

சனி 21, செப்டம்பர் 2024 8:03:09 AM (IST)



கோவில்பட்டியில் 8 பேருந்துகளில், பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலியை எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தூத்துக்குடி மாவட்ட இணை தலைமை சுற்றுச்சூழல் அலுவலர் ரவி, சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ஜெயக்குமார், உதவிப் பொறியாளர் சர்மிளா ஆகியோர் அடங்கிய குழுவினர் அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர். 

அப்போது 8 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த, அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். அப்போது 8 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த, அதிக ஒலி எழுப்பும் காற்று ஒழிப்பான்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory