» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரியல் எஸ்டேட் அதிபருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

சனி 21, செப்டம்பர் 2024 8:13:00 AM (IST)

கோவில்பட்டியில் ரியல் எஸ்டேட் அதிபரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கடலைக்காரத் தெருவைச் சேர்ந்தவர் க. சதீஷ் (43). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இருவருக்கும், இவரது சகலை கோவில்பட்டி முத்து நகர் முதல் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் கூலித்தொழிலாளி சரவணகுமாருக்கும் (40) இடையே குடும்பப் பிரச்னை தொடர்பான வழக்கு, குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இளையரசனேந்தல் சாலையில் உள்ள ஹோட்டலில், குடும்பத்துடன் சதீஷ் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சரவணகுமார், அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததுடன், அங்கு நின்று கொண்டிருந்த சதீசுக்கு சொந்தமான காரை உருட்டுக் கட்டையால் அடித்து சேதப்படுத்தினாராம். தடுக்க வந்த சதீஷை தாக்கினாராம். இதுகுறித்து சதீஷ் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, சரவணகுமாரை நேற்று கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory