» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின்மோட்டார் பொருத்திய குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: ஊராட்சி அதிகாரிகள் அதிரடி!

சனி 27, ஜூலை 2024 4:51:55 PM (IST)



மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் வீடுவீடாக அதிகாரிகள் ஆய்வு செய்து மின்மோட்டார் பொருத்தியுள்ள குடிதண்ணீர் இணைப்பை உடனடியாக துண்டித்தனர். 

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 59 கிராமங்கள் உள்ளடக்கிய பகுதியாக இருந்து வருகிறது. அந்த ஊராட்சியில் ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தின்கீழ் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு நேரடியாக குடிதண்ணீர் வழங்கப்படும் வகையில் இணைப்புகள் கொடுக்கப்பட்டு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. 

பல பகுதிகளில் சில சமயங்களில் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாக மாப்பிள்ளையூரணிபகுதியில் பல குடியிருப்புகளுக்கு சாியாக குடிதண்ணீர் வரவில்லை என்ற புகார் வந்தது. மேலும், விதிமுறைகளை மீறி மின்மோட்டார்கள் பொருத்தி தண்ணீா் எடுக்கப்பட்டதால் அதே பகுதியில் பல இடங்களுக்கு தண்ணீர் வராத நிலை ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சாா்பில் அதுபோன்ற முறையற்ற மின்மோட்டார்கள் பொறுத்தப்பட்டுள்ளதா என்று ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வீடு முதல் பொதுமக்கள் வீடு வரை ஆய்வு செய்து மின்மோட்டார் இணைப்புள்ள குடிதண்ணீர் இணைப்பை உடனடியாக துண்டித்தனர். இந்த ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், செயலாளர் ஜெயக்குமாா், உறுப்பினர்கள் மகேஸ்வாி, பாரதிராஜா, தங்கமாாிமுத்து, திமுக ஓன்றிய துணைச்செயலாளார் கணேசன், கிளைச்செயலாளர் காமராஜ், உள்பட பலர் உடன் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory