» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போத்தி விநாயகர் கோவிலில் அன்னதானம்: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

சனி 7, செப்டம்பர் 2024 3:43:09 PM (IST)



தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போத்தி விநாயகர் கோவிலில் அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற போத்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தர்மகர்த்தாவாக மறைந்த திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பெரியசாமி 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போத்தி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

அதனை தொடர்ந்து அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்ட சமபந்தி அன்னதான விருந்தை சாமி தரிசனம் செய்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், கோவில் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory