» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போத்தி விநாயகர் கோவிலில் அன்னதானம்: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
சனி 7, செப்டம்பர் 2024 3:43:09 PM (IST)
தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போத்தி விநாயகர் கோவிலில் அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற போத்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தர்மகர்த்தாவாக மறைந்த திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பெரியசாமி 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போத்தி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்ட சமபந்தி அன்னதான விருந்தை சாமி தரிசனம் செய்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், கோவில் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.