» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் போதைப் பொருள் சோதனை தீவிரம்!

திங்கள் 16, செப்டம்பர் 2024 8:38:27 PM (IST)



தூத்துக்குடி ரயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் இன்று திடீா் சோதனை மேற்கொண்டனா்.

தமிழகத்தில் போதை பொருள்கள் கடத்தப்படுவதாக வந்த புகாரைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடியில்,  துறைமுகம் ரோடு, ரயில் நிலையம் ரோடு, மற்றும் மாப்பிள்ளையுரணி பகுதிகளில் தூத்துக்குடி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் எழில் சுரேஷ் சிங், எஸ்ஐ அனிதா வேணி தலைமையில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

மேலும் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஆர்பிஎப், மற்றும் ரயில்வே போலீசார் உடன் இணைந்து போதைப் பொருள் சோதனையை போலீசார் தீவிரமாக மேற்கொண்டனர். இதில், ரயில் நிலையம் வந்த பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. மேலும், ரயில் பெட்டிகள், சரக்கு பெட்டகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 


மக்கள் கருத்து

உண்மை விளம்பிSep 16, 2024 - 09:53:35 PM | Posted IP 172.7*****

போதை பொருட்கள் ஏதேனும் கிடைத்ததா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory