» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஆள்மாறாட்டம் : பெண் உட்பட 2பேர் கைது!
புதன் 18, செப்டம்பர் 2024 8:36:24 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஆள்மாறாட்டம் செய்த பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக வந்தவர் என 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (18.09.2024) பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர்களிடம் பண மோசடி தொடர்பாக புகார் அளிக்க வந்தார். அப்போது அந்தப் பெண் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும் உத்திரபிரேதசம் மாநில கல்விதுறையில் உதவி செயலாளராக (IAS) இருப்பதாகவும், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னிடம் பணத்தை வாங்கி கொண்டு அந்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகாரளித்தார்.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்கள் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூலம் விசாரணை மேற்கொண்டதில் அவர் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியை சேர்ந்த மங்கையற்கரசி (44) என்பதும் கல்வித்துறை உதவி செயலாளர் என்று பொது ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்து பொது ஊழியரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதும் தெரியவந்தது.
மேலும் அவருடன் அவருக்கு உடந்தையாக வந்தவர் தாழையுத்து பகுதியைச் சேர்ந்த ரூபிநாத் (42) என்பதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து மங்கயைற்கரசி மற்றும்அவருடன் வந்த ரூபிநாத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 20, ஜூன் 2025 5:13:36 PM (IST)

திருச்செந்தூர் கோட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:05:59 PM (IST)

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 4:46:44 PM (IST)

கள் இறக்கிய சீமானை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
வெள்ளி 20, ஜூன் 2025 4:02:32 PM (IST)

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நெல்லையிலிருந்து இயக்கம்
வெள்ளி 20, ஜூன் 2025 3:07:30 PM (IST)

அமைச்சர் டிஆர்பி ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார்!
வெள்ளி 20, ஜூன் 2025 12:47:09 PM (IST)
