» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்த தடை : எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை!

புதன் 18, செப்டம்பர் 2024 5:52:01 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முன்பும் எந்தவிதமான ஆர்பாட்டம் மற்றும் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர, ஆட்சியர் அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களின் முன்பு பொதுமக்களோ, தனிநபரோ அல்லது எந்தவிதமான அமைப்புகளோ பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் ஆர்பாட்டம், போராட்டம், தர்ணா ஆகிவற்றில் ஈடுபட அனுமதி இல்லை. மேலும் மாவட்டத்தில் அந்தந்த உட்கோட்டங்களில் அனுமதியளிக்கப்பட்ட இடங்களில் ஆர்பாட்டம், போராட்டம் நடத்தப்படுவதற்கு 7 நாட்களுக்கு முன்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் ஆர்பாட்டம் மற்றும் போராட்டத்திற்கு முன் அனுமதி பெறாமலோ, அரசு அலுவலகங்கள் முன்போ பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஆர்பாட்டம் மற்றும் போராட்டம் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education





New Shape Tailors

Arputham Hospital




Thoothukudi Business Directory