» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா இணைதளம்: கனிமொழி எம்பி அறிமுகப்படுத்தினார்!

திங்கள் 16, செப்டம்பர் 2024 5:22:24 PM (IST)



தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா இணைதளம் மற்றும் இலட்சையினை கனிமொழி எம்பி அறிமுகப்படுத்தினார். 

தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 5ஆம் புத்தகத் திருவிழா நடத்தப்படவுள்ளது. இப்புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான புகைப்படக் கண்காட்சிப் போட்டி நடத்தப்படவுள்ளது. 5அவது புத்தகக் கண்காட்சியில் இடம்பெறவுள்ள "புகைப்பட போட்டி - 2024" க்கு செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை, புகைப்படம் எடுத்து & அனுப்ப வேண்டிய இணைப்பு https://Thoothukudicorporation.com/pc  - ஐ திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி அறிமுகப் படுத்தினார். 

இந்த நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வா்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் ரேவதி ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான புகைப்படக் கண்காட்சிப் போட்டி நடத்தப்படவுள்ளது. இப்புகைப்படப் போட்டிக்காக தூத்துக்குடியின் கலாச்சாரம். பாரம்பரியம். தெரு வாழ்க்கை, மதத் திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மக்கள் வாழ்க்கை முறை, மீனவ சமூகத்தின் வாழ்க்கை, தூத்துக்குடி இயற்கை காட்சிகள் (கடற் பரப்புக்கள் நதிக் காட்சிகள். ஈர நிலங்கள், நகர்புற காட்சிகள்) வனவிலங்குகள் மற்றும் ஈரநில பறவைகள், தொழிலாளர்கள் (தொழில்துறை. மீன்பிடித்தல்), விளையாட்டு போன்ற தலைப்புகளில் இருத்தல் வேண்டும்.

புகைப்படங்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த படங்களாக மட்டுமே இருக்க வேண்டும், இந்தியாவிலிருந்து எந்த வயதினரும் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பதாரர் அதிகபட்சம் ஐந்து படங்களைச் சமர்ப்பிக்கலாம், விண்ணப்பதாரர் தனது சொந்த படங்களை மட்டுமே அனுப்ப வேண்டும், கிராபிக்ஸ் மற்றும் Al உருவாக்கிய படங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது ஆகிய விதிகளைப் பின்பற்ற வேண்டும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory