» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நாளை கல் நிலைக் கால் வைக்கும் வைபவம்!
சனி 7, செப்டம்பர் 2024 8:09:55 PM (IST)
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நாளை (செப்.8) கல் நிலைக் கால் வைக்கும் வைபவம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அறங்காவலர்குழு திருப்பணி கமிட்டி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் திருகோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீஆண்டாள் சன்னதி ஆகிய மூன்று சன்னதிகளுக்கும் பழமை வாய்ந்த சிற்ப வேலைப்பாடுடன் கூடிய கல் நிலைக் கால் வைக்கும் வைபவமும் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி கல் மண்டப கட்டுமான வேலை 08.09.2024 (ஞாயிற்று கிழமை) காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் துவக்கி வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.