» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி : ஆட்சியர் தகவல்!
சனி 7, செப்டம்பர் 2024 4:51:08 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர் ஆகியோர்களுக்கு போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இரத்த சோகையினால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் உணவு, ஊட்டச்சத்து,உடல் நலம், தன் சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல் திட்டத்தின் மூலம் இரத்த சோகை இல்லாத கிராமமாக மாற்ற சிறப்பு பிரச்சாரம், சிறுதானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடத்திடவும் பாரம்பரிய உணவு வகைளின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் வட்டாரம், கிராம ஊராட்சி மற்றும் மாவட்ட அளவில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற உள்ளது.
அதனடிப்படையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி அளவில் 403 ஊராட்சிகளில் 09.09.2024 முதல் 12.09.2024 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி வெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.300/-ம், இரண்டாம் பரிசாக ரூ.200/-ம், மூன்றாம் பரிசாக ரூ.100/-ம் வழங்கப்படவுள்ளது.
வட்டார அளவில் 12 வட்டாரங்களில் 16.09.2024 முதல் 20.09.2024 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2,500/-ம், இரண்டாம் பரிசாக ரூ.2,000-ம், மூன்றாம் பரிசாக ரூ.1,500/-ம் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.
மேலும், மாவட்ட அளவில் 25.09.2024 அன்று நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/-ம், இரண்டாம் பரிசாக ரூ.4,000/-ம், மூன்றாம் பரிசாக ரூ.3,000/-ம் வழங்கப்படும்.
மேலும் 2 நபருக்கு ரூ.2,500/- வீதம் சிறப்பு பரிசாக ரூ.5,000/-மும், 3 நபருக்கு ஆறுதல் பரிசாக ரூ.2,000/- வீதம் ரூ.6,000/-மும், வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். கிராம ஊராட்சிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் வட்டார அளவில் நடைபெறும் ஊட்டச்சத்து போட்டிகளிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தகுதியுடையோர் ஆவார்கள்.
மேற்படி, கூடுதல் விபரங்களுக்கு அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் பெ. மதன்ராஜா தூத்துக்குடி வருகை: மாவட்ட ஆட்சியர், எஸ்பி வரவேற்பு!
வியாழன் 28, மே 2026 5:39:27 PM (IST)

தூத்துக்குடி மாநகரில் விரைவில் 24 மணி நேர குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
வியாழன் 28, மே 2026 4:48:35 PM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி!
வியாழன் 28, மே 2026 4:23:36 PM (IST)

குடும்பத் தகராறில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!
வியாழன் 28, மே 2026 4:16:19 PM (IST)

சீமானின் மகளுக்கு சீர் கொண்டு சென்றது ஏன்? அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ விளக்கம்!
வியாழன் 28, மே 2026 4:04:29 PM (IST)

தூத்துக்குடிக்கு வந்தே பாரத் உள்பட புதிய ரயில் சேவை : ரயில்வே அதிகாரியிடம் பயணிகள் நலச் சங்கம் மனு!
வியாழன் 28, மே 2026 3:35:46 PM (IST)










